கோவை கோட்டை மேடு சுற்றுவட்டார பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட 30 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை கார் வெடிப்பு சம்பவம் பிறகு தீவிர கண்காணிப்பில் இறங்கிய போலீஸார்கள் உக்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு மேலாக கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோட்டை மேடு கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த 23 ஆம் தேதி கார் வெடித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில்,மேலும் 6 பேரை போலீசார் கைது செய்து உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து வெடி பொருட்கள், சதி திட்டம் குறித்தான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் உக்கடம் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மாநகரில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்ட கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.



இந்நிலையில் இன்று காலை முதல் உக்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.



அதில் ஒர்ஷாப் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை உடனடியாக அகற்ற போலீசார் எச்சரித்தனர்.



ஆனால் அதையும் மீறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் போலீசார் தொடர்ந்து அங்கு தீவிர கண்காணிப்பு பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...