கோவை கோட்டை மேடு சுற்றுவட்டார பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட 30 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை கார் வெடிப்பு சம்பவம் பிறகு தீவிர கண்காணிப்பில் இறங்கிய போலீஸார்கள் உக்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு மேலாக கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோட்டை மேடு கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த 23 ஆம் தேதி கார் வெடித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில்,மேலும் 6 பேரை போலீசார் கைது செய்து உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து வெடி பொருட்கள், சதி திட்டம் குறித்தான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் உக்கடம் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மாநகரில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்ட கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.



இந்நிலையில் இன்று காலை முதல் உக்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.



அதில் ஒர்ஷாப் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை உடனடியாக அகற்ற போலீசார் எச்சரித்தனர்.



ஆனால் அதையும் மீறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் போலீசார் தொடர்ந்து அங்கு தீவிர கண்காணிப்பு பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...