கோவை கார் வெடிப்பு விபத்து: வழக்கில் கைதானவர்களின் வீடுகளில் தனிப்படை போலீசார் சோதனை

முதலில் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐவரின் வீடுகளில் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதிகளில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ள கார்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.


கோவை: கடந்த 23 ஆம் தேதி உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் வெடித்த விபத்தில் ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பின் கீழ் மேற்கொண்ட புலன் விசாரணையில் கோவையில் சதி திட்டம் அரங்கேற்ற திட்டமிட்டதும், இறந்த முபின் வீட்டில் கிலோ கணக்கில் வெடி பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கில், கூட்டு சதி, இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்துதல், UAPA சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ்உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27),ஃபிரோஸ் இஸ்மாயில் (27) மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முன் தினம் இரவு இறந்த முபினின் உறவினரான அஃப்சர் கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அனைவரும் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள நிலையில்,விசாரணைக்கு கூடுதலாக அவசாகம் வேண்டும் என்று மூன்று நாட்கள் காவலில் எடுத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை தனிப்படை போலீசார் கைதானவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் கைபற்றப்பட்ட விடயங்கள் குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.



முதலில் கைது செய்யப்பட்ட ஐவரின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் கேட்பாறற்று கிடந்த வாகனங்கள் போலீசாரால் அப்புறபடுத்தப்பட்டன. இந்த வழக்கு இன்று என்.ஐ. ஏவுக்கு மாற்ற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...