முதலில் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐவரின் வீடுகளில் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதிகளில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ள கார்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
கோவை: கடந்த 23 ஆம் தேதி உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் வெடித்த விபத்தில் ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பின் கீழ் மேற்கொண்ட புலன் விசாரணையில் கோவையில் சதி திட்டம் அரங்கேற்ற திட்டமிட்டதும், இறந்த முபின் வீட்டில் கிலோ கணக்கில் வெடி பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில், கூட்டு சதி, இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்துதல், UAPA சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ்உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27),ஃபிரோஸ் இஸ்மாயில் (27) மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முன் தினம் இரவு இறந்த முபினின் உறவினரான அஃப்சர் கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அனைவரும் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள நிலையில்,விசாரணைக்கு கூடுதலாக அவசாகம் வேண்டும் என்று மூன்று நாட்கள் காவலில் எடுத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை தனிப்படை போலீசார் கைதானவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் கைபற்றப்பட்ட விடயங்கள் குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.

முதலில் கைது செய்யப்பட்ட ஐவரின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் கேட்பாறற்று கிடந்த வாகனங்கள் போலீசாரால் அப்புறபடுத்தப்பட்டன. இந்த வழக்கு இன்று என்.ஐ. ஏவுக்கு மாற்ற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கில், கூட்டு சதி, இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்துதல், UAPA சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ்உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27),ஃபிரோஸ் இஸ்மாயில் (27) மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முன் தினம் இரவு இறந்த முபினின் உறவினரான அஃப்சர் கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அனைவரும் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள நிலையில்,விசாரணைக்கு கூடுதலாக அவசாகம் வேண்டும் என்று மூன்று நாட்கள் காவலில் எடுத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை தனிப்படை போலீசார் கைதானவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் கைபற்றப்பட்ட விடயங்கள் குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.
முதலில் கைது செய்யப்பட்ட ஐவரின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் கேட்பாறற்று கிடந்த வாகனங்கள் போலீசாரால் அப்புறபடுத்தப்பட்டன. இந்த வழக்கு இன்று என்.ஐ. ஏவுக்கு மாற்ற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.