உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் திருக்குறள் ஓவிய போட்டி - தேர்வு செய்யப்படும் 15 ஓவியங்களுக்கு தலா ரூ.40,000 பரிசு

திருக்குறள் மற்றும் திருக்குறள் கூறும் பொருள் தொடர்பான ஓவியங்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள படைப்பாளர்களிடம் இருந்து பெற்று நடுவர் குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு, சிறந்த 15 படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.


சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெறவுள்ள திருக்குறள் தொடர்பான ஓவிய போட்டியில் பங்கேற்க தமிழகம் முழுவதும் உள்ள ஓவியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் திருக்குறள் ஓவியக் காட்சி கூடத்தின் சார்பில் ஓவிய போட்டி நடைபெற உள்ளது.

திருக்குறள் மற்றும் திருக்குறள் கூறும் பொருள் தொடர்பான ஓவியங்களை தமிழ்நாடு முழுவதிலும் உள்ள படைப்பாளர்களிடம் இருந்து பெற்று நடுவர் குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு, சிறந்த 15 படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த போட்டியில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு படைப்புக்கும் தலா ரூ.40,000 பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் ஓவியர்கள் தங்கள் ஓவியங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். ஓவியங்கள் வரும் நவம்பர் 30ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும். .

ஓவியங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

இரண்டாம் முதன்மைச்சாலை,

மையத் தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி,

சென்னை-600 113.

கூடுதல் தகவல்களுக்கு 044-22542992 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...