கோவையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தள கூட்டரங்கில் நடைபெறும் என ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க மாதந்தோறும் குறைதீர் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
அக்டோபர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (28.10.2022) நடைபெற உள்ளது.
ஆட்சியர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் உள்ள கூட்டரங்கில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. காலை 10:30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்று தங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.