சூரிய கிரகணம் தொடர்பான மூடநம்பிக்கை, அச்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அன்னூர் அடுத்த நல்லிசெட்டி பாளையத்தில், த.பெ.தி.கவினர் கோழி குழம்பு சமைத்து பொதுமக்களுக்கு பரிமாறினர்.
கோவை அன்னூர் அருகே சூரிய கிரணத்தின் மீதான மூடநம்பிக்கைகளை போக்கும் வகையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோழி கறி குழம்பு சமைத்து பொதுமக்களுக்கு வழங்கினர்.

சூரிய கிரகணம் என்ற வானியல்செயல்பாடு நேற்று (25.10.2022) மாலை 2:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை நிகழ்ந்தது. சூரிய கிரகணம் தொடர்பாக பல்வேறு விதமான அச்சங்களும், மூடநம்பிக்கைகளும்பொது மக்களிடம் இருந்து வருவதாக பகுத்தறிவாளர்கள் தரப்பில் விமர்சிக்கப்படுகிறது.
இது போன்ற மூடநம்பிக்கைகளை கண்டு அச்சப்படத் தேவையில்லை. சாதாரண வானியல் நிகழ்வாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும். உலகம் சூரிய கிரகணத்தை ஒரு அறிவியல் சார்ந்த விஷயமாகவே கருதுகிறது. இதனால் பொதுமக்கள் எந்த விதத்திலும் அச்சப்பட வேண்டாம் என திராவிட அமைப்புகளை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அன்னூர் அடுத்த நல்லிசெட்டிபாளையம் பகுதியில் சூரிய கிரகணம் தொடர்பான மூடநம்பிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கோழி குழம்பு மற்றும் சோறு சமைத்து பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கினர். மேலும் அவர்களும் உண்டனர்.

சூரிய கிரகணம் என்ற வானியல்செயல்பாடு நேற்று (25.10.2022) மாலை 2:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை நிகழ்ந்தது. சூரிய கிரகணம் தொடர்பாக பல்வேறு விதமான அச்சங்களும், மூடநம்பிக்கைகளும்பொது மக்களிடம் இருந்து வருவதாக பகுத்தறிவாளர்கள் தரப்பில் விமர்சிக்கப்படுகிறது.
இது போன்ற மூடநம்பிக்கைகளை கண்டு அச்சப்படத் தேவையில்லை. சாதாரண வானியல் நிகழ்வாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும். உலகம் சூரிய கிரகணத்தை ஒரு அறிவியல் சார்ந்த விஷயமாகவே கருதுகிறது. இதனால் பொதுமக்கள் எந்த விதத்திலும் அச்சப்பட வேண்டாம் என திராவிட அமைப்புகளை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அன்னூர் அடுத்த நல்லிசெட்டிபாளையம் பகுதியில் சூரிய கிரகணம் தொடர்பான மூடநம்பிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கோழி குழம்பு மற்றும் சோறு சமைத்து பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கினர். மேலும் அவர்களும் உண்டனர்.