கோவை அன்னூரில் சூரிய கிரகணத்தின் மீதான மூடநம்பிக்கையை போக்க கோழி குழம்பு, சோறு சமைத்து பரிமாறிய த.பெ.தி.கவினர்

சூரிய கிரகணம் தொடர்பான மூடநம்பிக்கை, அச்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அன்னூர் அடுத்த நல்லிசெட்டி பாளையத்தில், த.பெ.தி.கவினர் கோழி குழம்பு சமைத்து பொதுமக்களுக்கு பரிமாறினர்.


கோவை அன்னூர் அருகே சூரிய கிரணத்தின் மீதான மூடநம்பிக்கைகளை போக்கும் வகையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோழி கறி குழம்பு சமைத்து பொதுமக்களுக்கு வழங்கினர்.



சூரிய கிரகணம் என்ற வானியல்செயல்பாடு நேற்று (25.10.2022) மாலை 2:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை நிகழ்ந்தது. சூரிய கிரகணம் தொடர்பாக பல்வேறு விதமான அச்சங்களும், மூடநம்பிக்கைகளும்பொது மக்களிடம் இருந்து வருவதாக பகுத்தறிவாளர்கள் தரப்பில் விமர்சிக்கப்படுகிறது.

இது போன்ற மூடநம்பிக்கைகளை கண்டு அச்சப்படத் தேவையில்லை. சாதாரண வானியல் நிகழ்வாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும். உலகம் சூரிய கிரகணத்தை ஒரு அறிவியல் சார்ந்த விஷயமாகவே கருதுகிறது. இதனால் பொதுமக்கள் எந்த விதத்திலும் அச்சப்பட வேண்டாம் என திராவிட அமைப்புகளை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், அன்னூர் அடுத்த நல்லிசெட்டிபாளையம் பகுதியில் சூரிய கிரகணம் தொடர்பான மூடநம்பிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கோழி குழம்பு மற்றும் சோறு சமைத்து பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கினர். மேலும் அவர்களும் உண்டனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...