கார் வெடித்த வழக்கில் முக்கிய திருப்புமுனையாக உயிரிழந்த முபின் மற்றும் கைது செய்யப்பட்டுள்ள இருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அனுதாபிகள் என்று தெரியவந்துள்ளது. எனவே, வழக்கு என்.ஐ ஏ விடம் ஒப்படைக்கப்படுமா..? என்று கேள்விகள் எழுந்துள்ளன.
கோவை: கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு காரில் உள்ள சிலிண்டர் வெடித்துவிபத்துக்குள்ளாகி முபின் என்ற நபர் பலியானார். இந்த நிலையில் காரில் இருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பலியான முபீன் வீட்டில் வெடி பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அவர் சதி செயலுக்கு முயன்றுள்ளார் என்பதைபோலீசாருக்கு உறுதிப்படுத்தியது.
வழக்கின் தொடர்ச்சியாக, தனிப்படை போலீசாரின் விசாரணையில் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஐவர் - நவாஸ், ஃபெரோஸ், தல்கா, ரியாஸ், இஸ்மாயில் உள்ளிட்டோர் உபா உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைதாகினர்.
இந்த நிலையில், கைதான நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கார் விபத்தில் பலியான முபீன், நவாஸ், ஃபெரோஸ் ஆகிய மூவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அனுதாபிகள் என்பதும் ஆனால் அவர்கள் அந்த அமைப்புடன் நேரடி தொடர்பில் இல்லை என்றும்தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், முபீன் கேரளா வீயூர் சிறையில் உள்ள சிலரை சந்தித்ததாக கூறப்படுகின்றது. அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு அஜ்மத் அலி என்ற நபரை சந்தித்து பேசியிருக்கின்றார். முபீன் சந்தித்து பேசிய அஜ்மல் அலி என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்.
இந்த நிலையில், வியூர் சிறைக்கு சென்ற முபின் அங்கு யார் யாரையெல்லாம் சந்தித்தார் ? எப்போதெல்லாம் சந்தித்தார் ? உடன் யார் இருந்தார்கள் ? என்பதை அறிய வியூர் சிறை வருகை பதிவேடு மற்றும் சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்துவருகின்றனர்.
மேலும், தேசிய முகமை அதிகாரிகள் கோயமுத்தூருக்கு நேற்று வந்துள்ள நிலையில், இந்த வழக்கு இன்று மாலை அல்லது நாளை தேசிய முகமை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கின் கீழ் கைதான நபர்கள் மீது உபா சட்டம் பதியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பலியான முபீன் வீட்டில் வெடி பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அவர் சதி செயலுக்கு முயன்றுள்ளார் என்பதைபோலீசாருக்கு உறுதிப்படுத்தியது.
வழக்கின் தொடர்ச்சியாக, தனிப்படை போலீசாரின் விசாரணையில் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஐவர் - நவாஸ், ஃபெரோஸ், தல்கா, ரியாஸ், இஸ்மாயில் உள்ளிட்டோர் உபா உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைதாகினர்.
இந்த நிலையில், கைதான நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கார் விபத்தில் பலியான முபீன், நவாஸ், ஃபெரோஸ் ஆகிய மூவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அனுதாபிகள் என்பதும் ஆனால் அவர்கள் அந்த அமைப்புடன் நேரடி தொடர்பில் இல்லை என்றும்தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், முபீன் கேரளா வீயூர் சிறையில் உள்ள சிலரை சந்தித்ததாக கூறப்படுகின்றது. அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு அஜ்மத் அலி என்ற நபரை சந்தித்து பேசியிருக்கின்றார். முபீன் சந்தித்து பேசிய அஜ்மல் அலி என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்.
இந்த நிலையில், வியூர் சிறைக்கு சென்ற முபின் அங்கு யார் யாரையெல்லாம் சந்தித்தார் ? எப்போதெல்லாம் சந்தித்தார் ? உடன் யார் இருந்தார்கள் ? என்பதை அறிய வியூர் சிறை வருகை பதிவேடு மற்றும் சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்துவருகின்றனர்.
மேலும், தேசிய முகமை அதிகாரிகள் கோயமுத்தூருக்கு நேற்று வந்துள்ள நிலையில், இந்த வழக்கு இன்று மாலை அல்லது நாளை தேசிய முகமை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கின் கீழ் கைதான நபர்கள் மீது உபா சட்டம் பதியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.