கோவையில் மீண்டும் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம் - மாநகரில் தேங்கும் குப்பைகள்

ஊதிய உயர்வு, நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மாநகர பகுதியில் தேங்கிய குப்பைகளை அகற்றும் பணியில் தாமதம்..


கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு, நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடமும் பல்வேறு மனுக்களை அளித்து வந்தனர்.

இந்நிலையில் இது குறித்து மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் கூலி உயர்வு குறித்த தீர்மானம் மேலோட்டமாக இருந்ததால் அதிருப்தி அடைந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை இன்று முதல் துவங்கி உள்ளனர்.



இதனால் கோவை மாநகரில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி உள்ளது. நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் அதிகளவு பட்டாசு பெட்டிகள், வெடித்த பட்டாசுகள், இனிப்பு பெட்டிகள் உட்பட குப்பைகள் எடுக்கப்படாமல் தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது.

தற்போது மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியாளர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டுள்ளதால் குப்பைகளை அகற்றும் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது.





Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...