கோவை அவிநாசி சாலையில் உள்ள எலக்ட்ரானிக் குடோனில் தீ விபத்து

அவிநாசி சாலை கடலைக்கார சந்து பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் கடைகள் குடோன்கள் செயல்பட்டு வருகின்றன. தீ விபத்தால், ஆயிரக்கணக்கு மதிப்பான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


கோவை: கோவை அவிநாசி சாலை கடலைக்கார சந்தில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக் குடோனில், பட்டாசு தீப்பொறி விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டது.



இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதால் அங்கு பட்டாசு வெடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பட்டாசின் தீப்பொறி அப்பகுதியில் குடோன் வைத்துள்ள சூரத் என்பவரது குடோனில் விழுந்து தீ பற்றி உள்ளது.



தீ மளமளவென பரவிய நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



தீ விபத்தால்,அக்கடையில் இருந்துகரும்புகை அதிகளவு வந்ததால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.

இவ்விபத்தினால் ஆயிரக்கணக்கான மதிப்பான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...