திருப்பூர் - புதுமார்க்கெட் வீதியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு படையெடுத்த மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் வந்ததன் காரணமாக திருப்பூர் - புதுமார்க்கெட் பகுதி முழுவதும் பொதுமக்கள் நெரிசல் அளவுக்கு அதிகமாக காணபட்டது.


திருப்பூர்: தமிழகத்தின் முன்னணி பின்னலாடை நகரமான திருப்பூர் மாநகரில் அதிகளவிலான வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர்.



தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக அனைத்து பெரும்பான்மையான பனியன் நிறுவனங்களிலும் போனஸ் வழங்கப்பட்டுவிட்டது.



இந்நிலையில் பண்டிகைக்கு தேவையான புத்தாடை, பட்டாசுகள், பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்க திருப்பூர் புதுமார்கெட் வீதி, காமராஜர் சாலை, குமரன் சாலை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டமானது அதிகரித்து காணப்பட்டது.



மேலும் குமரன் சாலை, பல்லடம் சாலை, உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.



திருப்பூர் மாவட்ட, மாநகர பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...