தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் வந்ததன் காரணமாக திருப்பூர் - புதுமார்க்கெட் பகுதி முழுவதும் பொதுமக்கள் நெரிசல் அளவுக்கு அதிகமாக காணபட்டது.
திருப்பூர்: தமிழகத்தின் முன்னணி பின்னலாடை நகரமான திருப்பூர் மாநகரில் அதிகளவிலான வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர்.

தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக அனைத்து பெரும்பான்மையான பனியன் நிறுவனங்களிலும் போனஸ் வழங்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் பண்டிகைக்கு தேவையான புத்தாடை, பட்டாசுகள், பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்க திருப்பூர் புதுமார்கெட் வீதி, காமராஜர் சாலை, குமரன் சாலை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டமானது அதிகரித்து காணப்பட்டது.

மேலும் குமரன் சாலை, பல்லடம் சாலை, உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.

திருப்பூர் மாவட்ட, மாநகர பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக அனைத்து பெரும்பான்மையான பனியன் நிறுவனங்களிலும் போனஸ் வழங்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் பண்டிகைக்கு தேவையான புத்தாடை, பட்டாசுகள், பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்க திருப்பூர் புதுமார்கெட் வீதி, காமராஜர் சாலை, குமரன் சாலை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டமானது அதிகரித்து காணப்பட்டது.
மேலும் குமரன் சாலை, பல்லடம் சாலை, உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.
திருப்பூர் மாவட்ட, மாநகர பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.