சுந்தராபுரம் அருகே குடிபோதையில் பைக்கில் சென்ற சிவசாமி என்பவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை: கோவை மாவட்டம் சுந்தராபுரம் அடுத்த மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி மகன் சிவசாமி (36). திருமணமான இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பணிகளை செய்து வந்த சிவசாமி நேற்றிரவு குடிபோதையில் தனது இருசக்கர வாகனத்தில் சுந்தராபுரம் நோக்கி சென்றுள்ளார்.
அப்போது மாச்சம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது திடீரென இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சரிந்து விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலையின் பின்புறம் மற்றும் முகத்தில் படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிவசாமி சிகிச்சை நள்ளிரவில் பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பணிகளை செய்து வந்த சிவசாமி நேற்றிரவு குடிபோதையில் தனது இருசக்கர வாகனத்தில் சுந்தராபுரம் நோக்கி சென்றுள்ளார்.
அப்போது மாச்சம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது திடீரென இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சரிந்து விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலையின் பின்புறம் மற்றும் முகத்தில் படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிவசாமி சிகிச்சை நள்ளிரவில் பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.