கோவை டவுன்ஹால் அருகே தீபாவளிக்காக துணி எடுக்க வந்த 17 வயது சிறுவன் குத்தி கொலை….!

நேற்று டவுன்ஹால் பகுதியில் இரு சிறுவர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்த தனியார் ஐ.டி.ஐ கல்வி கூடத்தில் படிக்கும் 17 வயது மாணவன், சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், தனது நண்பர்களுடன் நேற்று இரவு டவுன்ஹால் ராஜவீதி பகுதிக்கு துணி வாங்க வந்துள்ளார்.

அப்போது, அவருக்கு ஏற்கனவே பழக்கமான ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்த தனியார் ஐ.டி.ஐ கல்வி கூடத்தில் படிக்கும் 17 வயது சிறுவனும் அங்கு வந்துள்ளார்.

அவர்களிடையே இருந்த முன் பகை காரணமாக, இருவரும் சாலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஆத்திரத்தில் ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்த சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மற்றொரு சிறுவனை கழுத்து, முதுகு, வயிறு பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.

இதில், சரிந்து விழுந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு சிறுவர்களிடையே ஏற்பட்ட தகராறில், 17 வயது சிறுவனின் இந்த கொலை வெறி செயல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...