கோவை டவுன்ஹால் அருகே தீபாவளிக்காக துணி எடுக்க வந்த 17 வயது சிறுவன் குத்தி கொலை….!

நேற்று டவுன்ஹால் பகுதியில் இரு சிறுவர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்த தனியார் ஐ.டி.ஐ கல்வி கூடத்தில் படிக்கும் 17 வயது மாணவன், சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், தனது நண்பர்களுடன் நேற்று இரவு டவுன்ஹால் ராஜவீதி பகுதிக்கு துணி வாங்க வந்துள்ளார்.

அப்போது, அவருக்கு ஏற்கனவே பழக்கமான ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்த தனியார் ஐ.டி.ஐ கல்வி கூடத்தில் படிக்கும் 17 வயது சிறுவனும் அங்கு வந்துள்ளார்.

அவர்களிடையே இருந்த முன் பகை காரணமாக, இருவரும் சாலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஆத்திரத்தில் ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்த சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மற்றொரு சிறுவனை கழுத்து, முதுகு, வயிறு பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.

இதில், சரிந்து விழுந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு சிறுவர்களிடையே ஏற்பட்ட தகராறில், 17 வயது சிறுவனின் இந்த கொலை வெறி செயல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...