காவலர் வீரவணக்க நாளையொட்டி நாடு முழுவதும் பணியில் உயிர்நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வரும் நிலையில், திருப்பூரில் பணியில் உயிர்நீத்த காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் எஸ்.பிரபாகரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
திருப்பூர்: நாடு முழுவதும் இன்று வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், காவல்துறை பணியில் உயிர்நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர காவல்துறையின் சார்பில் பணியில் உயிர்நீத்த 264 காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் மாநகர ஆணையர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கும், பணியில் உயிர்நீத்த 264 காவலர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் கவாத்து நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் எஸ்.பிரபாகரன், மாவட்ட கண்காணிப்பாளர் சேசாங் சாய், துணை ஆணையர்கள் அபினவ் குமார், வனிதா, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதையை செலுத்தினர்.

தொடர்ந்து பணியின் போது உயிர்நீத்த காவலர்கள், ராணுவ வீரர்களுக்கு 48 குண்டுகள் முழங்க மரியாதையை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர காவல்துறையின் சார்பில் பணியில் உயிர்நீத்த 264 காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர் மாநகர ஆணையர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கும், பணியில் உயிர்நீத்த 264 காவலர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் கவாத்து நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் எஸ்.பிரபாகரன், மாவட்ட கண்காணிப்பாளர் சேசாங் சாய், துணை ஆணையர்கள் அபினவ் குமார், வனிதா, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதையை செலுத்தினர்.
தொடர்ந்து பணியின் போது உயிர்நீத்த காவலர்கள், ராணுவ வீரர்களுக்கு 48 குண்டுகள் முழங்க மரியாதையை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான காவல்துறையினர் கலந்து கொண்டனர்.