திருப்பூரில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு: பணியில் உயிர்நீத்த 264 காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் எஸ்.பிரபாகரன் மலர்வளையம் வைத்து மரியாதை

காவலர் வீரவணக்க நாளையொட்டி நாடு முழுவதும் பணியில் உயிர்நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வரும் நிலையில், திருப்பூரில் பணியில் உயிர்நீத்த காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் எஸ்.பிரபாகரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: நாடு முழுவதும் இன்று வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், காவல்துறை பணியில் உயிர்நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர காவல்துறையின் சார்பில் பணியில் உயிர்நீத்த 264 காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.



திருப்பூர் மாநகர ஆணையர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கும், பணியில் உயிர்நீத்த 264 காவலர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் கவாத்து நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் எஸ்.பிரபாகரன், மாவட்ட கண்காணிப்பாளர் சேசாங் சாய், துணை ஆணையர்கள் அபினவ் குமார், வனிதா, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதையை செலுத்தினர்.



தொடர்ந்து பணியின் போது உயிர்நீத்த காவலர்கள், ராணுவ வீரர்களுக்கு 48 குண்டுகள் முழங்க மரியாதையை செலுத்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் ஏராளமான காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...