கோவை முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் - நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் சமீரன்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முன்னாள், இந்நாள் படை வீரர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டத்தில், படை வீரர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள், தற்போது பணியில் உள்ளவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் படை வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்தில், வேலைவாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், சிறப்பு நிதி உதவி, குடிநீர் இணைப்பு, வீட்டு வரி சலுகை, இலவச காது கேட்கும் கருவி, குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இந்நிலையில், பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தீர்வு காண அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதில் முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாட்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் 11 முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்காக 3.40 லட்சம் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் ஒரு நபருக்கு ஒரு லட்சம் வீட்டுக்கடன் மானியம் என 12 நபர்களுக்கு 4.40 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.



இக்கூட்டத்தில் முன்னாள் படை வீரர்களின் நலன் உதவி இயக்குனர் மேஜர் ரூபா சுப்புலெட்சுமி, ஊராட்சி உதவி இயக்குநர் முருகேசன், உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...