கோவை முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் - நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் சமீரன்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முன்னாள், இந்நாள் படை வீரர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டத்தில், படை வீரர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள், தற்போது பணியில் உள்ளவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் படை வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்தில், வேலைவாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், சிறப்பு நிதி உதவி, குடிநீர் இணைப்பு, வீட்டு வரி சலுகை, இலவச காது கேட்கும் கருவி, குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இந்நிலையில், பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தீர்வு காண அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதில் முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாட்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் 11 முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்காக 3.40 லட்சம் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் ஒரு நபருக்கு ஒரு லட்சம் வீட்டுக்கடன் மானியம் என 12 நபர்களுக்கு 4.40 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.



இக்கூட்டத்தில் முன்னாள் படை வீரர்களின் நலன் உதவி இயக்குனர் மேஜர் ரூபா சுப்புலெட்சுமி, ஊராட்சி உதவி இயக்குநர் முருகேசன், உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...