கோவை முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் - நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் சமீரன்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முன்னாள், இந்நாள் படை வீரர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டத்தில், படை வீரர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள், தற்போது பணியில் உள்ளவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் படை வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்தில், வேலைவாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், சிறப்பு நிதி உதவி, குடிநீர் இணைப்பு, வீட்டு வரி சலுகை, இலவச காது கேட்கும் கருவி, குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இந்நிலையில், பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தீர்வு காண அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதில் முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாட்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் 11 முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்காக 3.40 லட்சம் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் ஒரு நபருக்கு ஒரு லட்சம் வீட்டுக்கடன் மானியம் என 12 நபர்களுக்கு 4.40 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.



இக்கூட்டத்தில் முன்னாள் படை வீரர்களின் நலன் உதவி இயக்குனர் மேஜர் ரூபா சுப்புலெட்சுமி, ஊராட்சி உதவி இயக்குநர் முருகேசன், உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...