மதுக்கரை அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போக்சோ வழக்கு குற்றவாளி பால்ராஜ் மீது கோவை ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.
கோவை: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மணி என்பவரது மகன் பால்ராஜ் (33). இவர் கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சமீபத்தில், பால்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே கைது செய்யப்பட்ட நபர் பாலியல் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து குற்றவாளி பால்ராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், ஆட்சியர் சமீரன் பரிந்துரை செய்திருந்தார்.
இதனை ஏற்று குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி பால்ராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சமீபத்தில், பால்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே கைது செய்யப்பட்ட நபர் பாலியல் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து குற்றவாளி பால்ராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், ஆட்சியர் சமீரன் பரிந்துரை செய்திருந்தார்.
இதனை ஏற்று குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி பால்ராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.