ஜெ. மரணம் குறித்த ஆறுமுகசாமி அறிக்கை புரொபஷனல் கிடையாது - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிக்கையை, பாடமாக வைத்து காவல்துறை கற்றுக் கொள்ள வேண்டும்.



கோவை: கோவையில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமானம் மூலம் கோவைக்கு வந்தார்.



அப்போது, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, இந்தியாவில் உள்ள பின்னலாடை தொழில் அதிகமாக கொங்கு பகுதியில் உள்ளது. அதில் தற்போது 40% ஆர்டர் குறைந்துள்ளன.

அத்திக்கடவு திட்டம் ஏன் இன்னும் முடிக்கவில்லை?. பரம்பிகுளம் அணையில் இருந்து, 12 டி.எம்.சி நீர் வீணாகியுள்ளது. இனி இதுபோன்று நடக்க கூடாது. கோவை நகருக்கு கூடுதலான மருத்துவக் கல்லூரி வேண்டும். அதற்கான தேவை உள்ளது.

ஒரே நாளில் விவாதம் இல்லாமல் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது ஜனநாயகம் இல்லை. தமிழகத்தில் போதை பழக்கம் அதிகமாகி வருகிறது. முதல்வர் இதில் கவனம் செலுத்துகிறார். ஆனால் அது போதுமானது இல்லை. போதுமான அளவு இந்தத் துறையில் காவலர்கள் இல்லை.

ஆம்னி பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும். விமானத்தில் சென்னையில் இருந்து வந்தேன் ரூ.3,300 செலவானது. இதே நிலை தான் ஆம்னி பேருந்திலும் உள்ளது.

தனியார் நிறுவனங்கள் பால் விலையை குறைக்க வேண்டும். தனியார் பால் நிறுவனங்கள் மாபியா போல விலையேற்றம் செய்கின்றனர். ஒரு வருடத்தில் நான்கு முறை விலை ஏற்றி உள்ளனர்.



மேலும் தீபாவளிக்காக டாஸ்மாக் விற்பனைக்கு டார்கெட் வைக்கிறார்கள். டாஸ்மாக் மூலம் வரும் நிதி வளர்ச்சி கிடையாது வீழ்ச்சி. அரசுக்கு வருமானம் 33 விழுக்காடாக இருந்தாலும் இது இழப்பு தான். ஒன்றரை லட்சம் கோடி வரை இழப்புதான்.

கல்விக்கு இப்படி இலக்கு வையுங்கள். தடுப்பூசிக்கு இலக்கு வையுங்கள், குடிக்கு இலக்கு வைக்காதீர்கள். இது அரசுக்கு கேடு.

மேலும் பரம்பிக்குளம் ஆழியார் திட்டம், பாண்டியாறு பொன்னம்பல திட்டம் பேசித் தீர்க்க வேண்டும். இது தமிழ்நாடு - கேரளா என இருமாநில பிரச்சினை. தமிழக முதல்வர் இதனை சரி செய்ய வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமியின் அறிக்கை தொழில்முறையானது (Professional) இல்லை, அந்த அறிக்கையை வைத்து அரசியல் வேண்டுமானால் செய்யலாம். அதில் தொழில்நுட்ப ரீதியாக எதுவும் சொல்லப்படவில்லை. சட்டமன்றத்தில் எடுபடுமா என்ற கேள்வி உள்ளது.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதைப் பாடமாக வைத்து காவல்துறை கற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...