கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கிணத்துக்கடவு ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு மனு அளிப்பு

கிணத்துக்கடவு ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு இன்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை இன்று நேரில் சந்தித்த கிணத்துக்கடவு ஊராட்சி மன்றம். தங்கள் ஊராட்சியின் தேவைகள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்தது.

அந்த மனுவில் கிணத்துக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வங்கி கணக்கில் இருந்து ஒன்றாவது வங்கி கணக்கில் நிதி பரிமாற்றம் செய்ய வேண்டும், ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்கள் மற்றும் குடிநீர் விநியோகிப்பாளர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பணி நியமனம் செய்ய வேண்டும்.



மேலும் ஊராட்சிகளில் தெருவிளக்கு வாங்குவதில் உள்ள குளறுபடிகளை அகற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை அடங்கிய மனுவை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் கிணத்துக்கடவு ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரனை சந்தித்து மனு அளித்தனர்.



இதில் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் பிரபு என்ற திருவாக்கரசர், கௌரவ தலைவர் சுந்தர்ராஜ், துணைத்தலைவர் முருகவேல், இணை செயலாளர் ரத்னசாமி, தர்மராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...