கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கிணத்துக்கடவு ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு மனு அளிப்பு

கிணத்துக்கடவு ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு இன்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை இன்று நேரில் சந்தித்த கிணத்துக்கடவு ஊராட்சி மன்றம். தங்கள் ஊராட்சியின் தேவைகள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்தது.

அந்த மனுவில் கிணத்துக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வங்கி கணக்கில் இருந்து ஒன்றாவது வங்கி கணக்கில் நிதி பரிமாற்றம் செய்ய வேண்டும், ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்கள் மற்றும் குடிநீர் விநியோகிப்பாளர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பணி நியமனம் செய்ய வேண்டும்.



மேலும் ஊராட்சிகளில் தெருவிளக்கு வாங்குவதில் உள்ள குளறுபடிகளை அகற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை அடங்கிய மனுவை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் கிணத்துக்கடவு ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரனை சந்தித்து மனு அளித்தனர்.



இதில் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் பிரபு என்ற திருவாக்கரசர், கௌரவ தலைவர் சுந்தர்ராஜ், துணைத்தலைவர் முருகவேல், இணை செயலாளர் ரத்னசாமி, தர்மராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...