கோவை மாநகராட்சியில் இந்தி திணிப்புக்கு எதிராக மாமன்ற கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

கோவை மாநகர மேயர் மற்றும் ஆணையர் தலைமையில் இன்று சாதாரண மாமன்ற கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.


கோவை: கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள விக்டோரியா ஹாலில் மாநகராட்சி சாதாரண மாமன்ற கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் ஆணையாளர் பிரதாப் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த மாமன்ற கூட்டத்தில் புதிய சொத்து வரி அமல்படுத்துவது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தை மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் கார்த்திகேயன் முன்மொழிந்தார்.



இதற்கு மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்த நிலையில் மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...