எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூர் எம்ஜிஆர் சிலை அருகே அதிமுகவினர் சாலைமறியல்

திருப்பூர் மாநகராட்சி அடுத்த எம்ஜிஆர் சிலை அருகே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: தமிழக சட்டப்பேரவையில், எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமாரை அதிமுக எம்எல்ஏக்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை சட்டமன்றத்தில் சபாநாயகர் அங்கீகரிக்க வலியுறுத்தி.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுகவினர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி அடுத்த எம்ஜிஆர் சிலை அருகே அதிமுகவின் சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்த காவல்துறையினரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட எதிர்க்கட்சித் துணை தலைவரை அங்கீகாரம் செய்யாத சபாநாயகர் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



அதிமுகவினரின் சாலை மறியல் போராட்டம் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...