கோவை மாமன்ற கூட்டத்தில் 47வது வார்டு அதிமுக கவுன்சிலர் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா - பரபரப்பு..!

கோவை மாமன்ற சாதாரண கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், 47 வது வார்டு அதிமுக உறுப்பினர் பிரபாகரன், ரத்தினபுரி பள்ளியில் அடிப்படை வசதிகள் கோரி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.



கோவை: கோவை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.



இந்த நிலையில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட47 வது வார்டு அதிமுக உறுப்பினர் பிரபாகரன், ரத்தினபுரி அருகேயுள்ள பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றும், மாணவர்கள் அமரும் இருக்கைகள் மற்றும் மேஜைகள் அமைக்கப்படாததை கண்டித்து மாமன்ற கூட்டம் நடக்கும்போது தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.



பிரபாகரனின் இந்த போராட்டம் காரணமாக திமுக கவுன்சிலர்களுக்கும், அதிமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடைய மேயர் கல்பனா குறுக்கிட்டு அதிமுக ஆட்சி செய்த பத்து ஆண்டுகள் நீங்க என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.



மேலும், இனி வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம், மன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனக்கூறி நீங்கள் வெளியே செல்ல அறிவுறுத்தினார்.

இச்சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...