ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் இந்திய அளவிலான கல்லூரி முதல்வர்களின் 18-வது சர்வதேச கருத்தரங்கம் நாளை துவக்கம்


அகில இந்திய முதல்வர்கள் சங்கம் சார்பில் இந்திய அளவிலான கல்லூரி முதல்வர்களின் 18-வது சர்வதேச கருத்தரங்க மாநாட்டினை கோவை குனியமுத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் வரும் பிப்ரவரி 4 மற்றும் 5ம் தேதிகளில் நடத்த உள்ளது.



இம்மாநாட்டில் இந்தியாவிலிருந்து பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்கள், பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் தலைசிறந்த கல்வியாளர்கள் என மொத்தம் 300 பேர் கலந்து கொண்டு கல்வி முன்னேற்றத்திற்காக பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்து விவாதிக்க உள்ளனர்.

இக்கருத்தரங்க மாநாடு இந்தியாவில் கல்வித்துறையில் பல முன்னேற்றங்கள் மற்றும் மாற்றங்களை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கல்லூரி முதல்வர்கள் இணைந்து செயல்படும் சங்கமானது 1998-ம் ஆண்டு தில்லியில் தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது தேசிய அளவில் கல்லூரி முதல்வர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாகும். இது வி.ஆர்.ஸ்ரீகுருகர் அவர்களை நிறுவனர் மற்றும் தலைவராகவும், ஜி.ராமசந்திரம் அவர்களை செயலாளராகவும் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் கிட்டத்தட்ட 538 கல்லூரி முதல்வர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச கருத்தரங்க மாநாடு "முன்னேற்றத்தை நோக்கி" எனும் பொருளில் நடைபெறவுள்ளது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பி விருந்தினராகவும், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சிறப்பு அழைப்பாளராகவும் பங்கேற்க உள்ளனர்.

மேலும், பாரதியார் பல்கலைக் கழக துணை வேந்தர் ஏ.கணபதி, ஏஐசிபி தலைவர் வி.ஆர்.ஸ்ரீகுருகர், ஆர்.கே.மகாஜன் மற்றும் சுபாஸ் பிரம்பத் ஆகியோர்ங்கேற்று கருத்தரங்கினை துவக்கிவைத்து உரையாற்றவுள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...