இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உயர் கல்வி நிறுவனங்களில் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்.


கோவை: இந்தியா முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களில் இந்தியை முதன்மையான மொழியாக்க முயன்றுள்ள மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் சுமார் 50க்கும் மேற்ப்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது பேசிய மாணவர் சங்கத்தினர் இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் இந்தியை முதன்மை மொழியாக ஆக்கியுள்ளனர். இதனால் பிற மாநில மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் உள்ளது.

அனைத்து மொழியையும் ஒரே சமமாக பார்க்க வேண்டும். இன்று தமிழக சட்டப்பேரவையில் இந்தி திணிப்பிற்கு எதிராக தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை இந்திய மாணவர் சங்கத்தினர் வரவேற்கிறோம், அதே போல உயர் கல்வி நிலையங்களில் இந்தி கட்டாயத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...