கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் தேங்கிய மழைநீர் - வாகன ஓட்டிகள் அவதி

கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்மழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.


கோவை: கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.



நேற்றும் மாலை கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.



இந்த நிலையில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள கோவை சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர்.



சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தண்ணீரில் பாதி அளவு மூழ்கிய நிலையில் காணப்பட்டது. மழைநீர் தேங்கிய சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...