கோவையில் விதிகளை மீறி அமைக்கப்படும் பட்டாசு கடைகள் - ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் முழுவதும் விதிகளை மீறி திருமண மண்டபங்களில் அமைக்கப்படும் பட்டாசு கடைகளுக்கு அனுமதியை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் விதிமுறைகளை மீறி திருமண மண்டபங்களிலும், பொது இடங்களிலும், பட்டாசு கடைகள் போடப்படுகிறது. இதுபோன்ற கடைகளால், கடந்த காலங்களில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக விதிமுறைகளை மீறி போடப்பட்டுள்ள பட்டாசு கடைகளுக்கு அனுமதியை ரத்து செய்ய கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வரும் 24.10.2022 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்காக கோவை மாவட்டம் முழுவதும் பட்டாசு கடைகள் போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பட்டாசு கடைகள் போடுவதற்கான விதிமுறைகளை மீறி ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு கடைகள் போடப்படுகிறது. இதனால் விபத்துகளும் பொதுமக்களுக்கு ஆபத்துகளும் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோவை மாவட்டம் முழுவதும் விதிமுறைகள் மீறி திருமண மண்டபங்களிலும், பொது இடங்களிலும், முன்னெச்சரிக்கைநடவடிக்கை எதுவும் எடுக்காமல் போடப்பட்டுள்ள பட்டாசு கடைகளுக்கு அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

விதிமுறைகள் மீறி செயல்படும் பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளித்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி அளிக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகள் விதிமுறைகள் படி போடப்பட்டுள்ளதா என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்ததவிட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...