திருப்பூர் பாரியூர் அம்மன் நகர் பகுதியில் இருந்த தனியார் அடகு கடையில் அடகு வைக்கப்பட்ட நகைகளுடன் உரிமையாளர் மாயமான நிலையில், அவரை கைது செய்து நகைகளை மீட்டுத்தர வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூர் பாரியூர் அம்மன் நகர் பகுதியில் ஸ்ரீ லட்சுமி கோல்டு பைனான்ஸ் என்ற நகை அடகு கடை செயல்பட்டு வந்தது. இங்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர்.

இந்நிலையில், அடகு கடைக்காரர் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருப்பதாகவும் இதுகுறித்து பலமுறை திருப்பூர் வீரபாண்டி மற்றும் பல்லடம் காவல் நிலையங்களில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு, தங்களது நகைகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், அடகு கடைக்காரர் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருப்பதாகவும் இதுகுறித்து பலமுறை திருப்பூர் வீரபாண்டி மற்றும் பல்லடம் காவல் நிலையங்களில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு, தங்களது நகைகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.