திருப்பூரில் அடகு வைத்த நகைகளுடன் மாயமான அடகு கடை உரிமையாளர் - பாதிக்கப்பட்ட மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருப்பூர் பாரியூர் அம்மன் நகர் பகுதியில் இருந்த தனியார் அடகு கடையில் அடகு வைக்கப்பட்ட நகைகளுடன் உரிமையாளர் மாயமான நிலையில், அவரை கைது செய்து நகைகளை மீட்டுத்தர வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் பாரியூர் அம்மன் நகர் பகுதியில் ஸ்ரீ லட்சுமி கோல்டு பைனான்ஸ் என்ற நகை அடகு கடை செயல்பட்டு வந்தது. இங்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர்.



இந்நிலையில், அடகு கடைக்காரர் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருப்பதாகவும் இதுகுறித்து பலமுறை திருப்பூர் வீரபாண்டி மற்றும் பல்லடம் காவல் நிலையங்களில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.



எனவே மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு, தங்களது நகைகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...