கோவையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அண்ணனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த தம்பி கைது..!

மேட்டுப்பாளையம் அடுத்த திம்மம்பாளையம் புதூர் பகுதியில் குடும்ப தகராறில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிதிநிறுவன அதிபரான ரங்கராஜை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த அவரது தம்பி குபேந்திரன் கைது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை, திம்மம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ் (67). நிதி நிறுவன அதிபரான இவருக்குமனைவி கமலா, மகள் சவிதா,மகன் கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.

இதில் மகள் சவிதா திருமணமாகி அதே கிராமத்தில் கணவர் வீட்டில் வசித்து வருகிறார். ரங்கராஜுக்கும் அவரது மனைவி கமலாவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்பு விவாகரத்து பெற்றுள்ளனர். இதனால் ரங்கராஜ் தனியாக வசித்து வந்துள்ளார்.

இதேபோல சிறுமுகை பழத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜனின் சகோதரர் குபேந்திரன்(57). இவர், லிங்கபுரம் பகுதியில் உள்ள பவானிசாகர் நீர்த்தேக்கம் அருகே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து திம்மம்பாளையம் புதூர் பகுதியில் உள்ள தனது அண்ணன் ரங்கராஜ் வீட்டில் கடந்த மூன்று மாதங்களாக குபேரந்திரன் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதேபோல், கடந்த சனிக்கிழமை இரவும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.பின்னர் தூங்கச் சென்றுள்ளனர். இருப்பினும் ஆத்திரம் தாங்காத குபேந்திரன் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரங்கராஜை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து குபேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...