கோவை வடபுதூரில் அரசுக்கு சொந்தமான பாறையை உடைக்க மலசர் இன மக்கள் எதிர்ப்பு - நூதன போராட்டம்

வடபுதூரில் அரசுக்கு சொந்தமான மணியரசன் பாறை உடைக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு கோவில் இருப்பதால் உடைக்க எதிர்ப்பு தெரிவித்து பாறை மீது ஏறி அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவுஅருகே வடபுதூர் பகுதியில் அரசு புறம்போக்கில் 7.5 ஏக்கர் பரப்பளவில் மணியரசன் பாறை உள்ளது.

இந்த பாறையின் உச்சியில் இந்து மலசர் இனமக்கள் மணியரசி அம்மனை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த கோவில் இந்து மலசர் இன மக்கள் குலதெய்வமாக விளங்கி வருகிறது.

இந்த கோவில் அமைந்துள்ள பாறையை இரண்டு நபர்கள் குத்தகைக்கு எடுத்து பாறையை உடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாறையை உடைக்க எதிர்ப்பு தெரிவித்து, மலசர் இன மக்கள் பாறை மீது ஏறிதிறந்த வெளியில் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிணத்துக்கடவு போலீசார், கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மலசர் இன மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தற்போது மணியரசன் பாறையின் பெரும்பாலான பகுதியில் கற்கள் உடைத்து எடுக்கப்பட்டு உள்ளதால் தற்போது மலசர் இன மக்கள் வணங்கும் கோவில் அந்தரத்தில் உள்ளது.

இந்த பாறை மீது உள்ள மணியரசி சாமி பேரை சொல்லி மலசர் இன மக்கள் சாதி சான்றிதழ் வாங்கி வருவதாகவும், பாறை மீது உள்ள சாமியை தரிசனம் செய்ய வழியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...