வடபுதூரில் அரசுக்கு சொந்தமான மணியரசன் பாறை உடைக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு கோவில் இருப்பதால் உடைக்க எதிர்ப்பு தெரிவித்து பாறை மீது ஏறி அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவுஅருகே வடபுதூர் பகுதியில் அரசு புறம்போக்கில் 7.5 ஏக்கர் பரப்பளவில் மணியரசன் பாறை உள்ளது.
இந்த பாறையின் உச்சியில் இந்து மலசர் இனமக்கள் மணியரசி அம்மனை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த கோவில் இந்து மலசர் இன மக்கள் குலதெய்வமாக விளங்கி வருகிறது.
இந்த கோவில் அமைந்துள்ள பாறையை இரண்டு நபர்கள் குத்தகைக்கு எடுத்து பாறையை உடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாறையை உடைக்க எதிர்ப்பு தெரிவித்து, மலசர் இன மக்கள் பாறை மீது ஏறிதிறந்த வெளியில் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிணத்துக்கடவு போலீசார், கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மலசர் இன மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
தற்போது மணியரசன் பாறையின் பெரும்பாலான பகுதியில் கற்கள் உடைத்து எடுக்கப்பட்டு உள்ளதால் தற்போது மலசர் இன மக்கள் வணங்கும் கோவில் அந்தரத்தில் உள்ளது.
இந்த பாறை மீது உள்ள மணியரசி சாமி பேரை சொல்லி மலசர் இன மக்கள் சாதி சான்றிதழ் வாங்கி வருவதாகவும், பாறை மீது உள்ள சாமியை தரிசனம் செய்ய வழியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த பாறையின் உச்சியில் இந்து மலசர் இனமக்கள் மணியரசி அம்மனை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த கோவில் இந்து மலசர் இன மக்கள் குலதெய்வமாக விளங்கி வருகிறது.
இந்த கோவில் அமைந்துள்ள பாறையை இரண்டு நபர்கள் குத்தகைக்கு எடுத்து பாறையை உடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாறையை உடைக்க எதிர்ப்பு தெரிவித்து, மலசர் இன மக்கள் பாறை மீது ஏறிதிறந்த வெளியில் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிணத்துக்கடவு போலீசார், கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மலசர் இன மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
தற்போது மணியரசன் பாறையின் பெரும்பாலான பகுதியில் கற்கள் உடைத்து எடுக்கப்பட்டு உள்ளதால் தற்போது மலசர் இன மக்கள் வணங்கும் கோவில் அந்தரத்தில் உள்ளது.
இந்த பாறை மீது உள்ள மணியரசி சாமி பேரை சொல்லி மலசர் இன மக்கள் சாதி சான்றிதழ் வாங்கி வருவதாகவும், பாறை மீது உள்ள சாமியை தரிசனம் செய்ய வழியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.