கிணத்துக்கடவு ரயில் நிலைய சாலையில் உயர் ரக போதை பொருட்களை விற்பனை செய்துவந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார், கிஷோர் அகமது ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ரயில் நிலைய சாலையில் போதை பொருள்மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக கிணத்துக்கடவு காவல்நிலைய ஆய்வாளர் செந்தில் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் முந்தினம் இரவு ரயில் நிலைய சாலையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் அவர்களிடம் உயர்ரக போதை மாத்திரை மற்றும் போதைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதன் பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் மற்றும் கிஷோர் அகமது என்பது தெரியவந்தது.
பின்னர் இருவரிடம் இருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதன் அடிப்படையில் முந்தினம் இரவு ரயில் நிலைய சாலையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் அவர்களிடம் உயர்ரக போதை மாத்திரை மற்றும் போதைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதன் பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் மற்றும் கிஷோர் அகமது என்பது தெரியவந்தது.
பின்னர் இருவரிடம் இருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.