கோவை கிணத்துக்கடவு அருகே உயர் ரக போதைபொருள் விற்பனை - இருவர் கைது

கிணத்துக்கடவு ரயில் நிலைய சாலையில் உயர் ரக போதை பொருட்களை விற்பனை செய்துவந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார், கிஷோர் அகமது ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ரயில் நிலைய சாலையில் போதை பொருள்மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக கிணத்துக்கடவு காவல்நிலைய ஆய்வாளர் செந்தில் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் முந்தினம் இரவு ரயில் நிலைய சாலையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து சோதனை செய்தனர்.



இந்த சோதனையில் அவர்களிடம் உயர்ரக போதை மாத்திரை மற்றும் போதைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதன் பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் மற்றும் கிஷோர் அகமது என்பது தெரியவந்தது.

பின்னர் இருவரிடம் இருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...