நகர்‌ நல மருத்துவமனைகளுக்கு வருபவரிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் - ஆய்வுக்‌ கூட்டத்தில் கோவை மாநகராட்சி ஆணையர்

நோயாளிகளிடம்‌ கனிவுடன்‌ பேசி நோய்த் தொற்றுகள் ஏற்பட்டால்‌, அப்பகுதியில்‌ சிறப்பு மருத்துவ முகாம்களை உடனடியாக நடத்திட வேண்டும் என்று நகர் நல மருத்துவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் அறிவுறுத்தல்‌.


கோவை: நேற்று கோவையில் நடைபெற்ற நகர்‌ நல மருத்துவமனைகளின்‌ செயல்பாடுகள்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்த,மாவட்ட ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ மாநகர பகுதிகளில்‌ செயல்படும்‌ நகர்‌ நல மையங்களுக்கு வரும்‌ நோயாளிகளிடம்‌ கனிவுடன்‌ பேசி அவர்களுக்குத்‌ தேவையான சிகிச்சைகள்‌ அளித்திட அறிவுறுத்தினார்.

மக்களைத்‌ தேடி மருத்துவ முகாம்களை மாநகரம்‌ முழுவதும்‌ சிறப்பு கவனம்‌ செலுத்தி நடத்திடவும்‌, காய்ச்சல்‌ உள்ளிட்ட நோய்த்‌ தொற்றுகள் ஏற்பட்டால்‌ அப்பகுதியில்‌ சிறப்பு மருத்துவ முகாம்களை உடனடியாக நடத்திடவும்‌ மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர்,கடந்த மாத காலத்தில்‌ ராஜவீதி, ரத்தினபுரி உப்பிலிபாளையம்‌, ஆர்‌.கே.பாய்‌, துடியலார்‌ உள்ளிட்ட மகப்பேறு மருத்துவ மையங்களில்‌ 50 மேற்பட்ட மகப்பேறுகள்‌ நடைபெற்று தாயும்‌, சேயும்‌ நலமுடன்‌ உள்ளனர்‌.

இதேபோல்‌, மற்ற மகப்பேறு மருத்துவ மையங்களிலும்‌ சிறப்பான முறையில்‌ மகப்பேறு சிகிச்சைகள்‌ மேற்கொள்ளவும்‌, சித்த மருத்துவமனைகளில்‌ நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர்‌ உள்ளிட்ட சித்த மருத்துவ பொருட்களை தேவையான அளவு இருப்பில்‌ வைத்திட வேண்டும்.



BCU மருந்துகளை குடியிருப்பு பகுதிகளில்‌ உள்ள தொட்டிகளில்‌ ஊற்றிடவும்‌, கொசு புகை மருந்துகளை அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும்‌ தொடாந்து அடித்திட பணியாளர்களுக்கு அறிவுறுத்திட வேண்டும்.

லேப்‌ டெக்னீசியன்‌ காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பிடவும்‌, நகர்‌ நல மையங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை இருப்பில்‌ வைத்திட வேண்டுமெனவும்‌, மழைக்காலம்‌ என்பதால்‌ சிறப்பு கவனமுடன்‌ பணியாற்றிட வேண்டுமென மருத்துவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ அறிவுறுத்தினார்‌.

இக்கூட்டத்தில்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷாமிளா, உதவி நகர்‌ நல அலுவலா்‌ மரு.மாணிக்கவேல்‌, மற்றும்‌ மருத்துவர்கள்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...