நோயாளிகளிடம் கனிவுடன் பேசி நோய்த் தொற்றுகள் ஏற்பட்டால், அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்களை உடனடியாக நடத்திட வேண்டும் என்று நகர் நல மருத்துவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் அறிவுறுத்தல்.
கோவை: நேற்று கோவையில் நடைபெற்ற நகர் நல மருத்துவமனைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்த,மாவட்ட ஆணையாளர் மு.பிரதாப் மாநகர பகுதிகளில் செயல்படும் நகர் நல மையங்களுக்கு வரும் நோயாளிகளிடம் கனிவுடன் பேசி அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகள் அளித்திட அறிவுறுத்தினார்.
மக்களைத் தேடி மருத்துவ முகாம்களை மாநகரம் முழுவதும் சிறப்பு கவனம் செலுத்தி நடத்திடவும், காய்ச்சல் உள்ளிட்ட நோய்த் தொற்றுகள் ஏற்பட்டால் அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்களை உடனடியாக நடத்திடவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர்,கடந்த மாத காலத்தில் ராஜவீதி, ரத்தினபுரி உப்பிலிபாளையம், ஆர்.கே.பாய், துடியலார் உள்ளிட்ட மகப்பேறு மருத்துவ மையங்களில் 50 மேற்பட்ட மகப்பேறுகள் நடைபெற்று தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்.
இதேபோல், மற்ற மகப்பேறு மருத்துவ மையங்களிலும் சிறப்பான முறையில் மகப்பேறு சிகிச்சைகள் மேற்கொள்ளவும், சித்த மருத்துவமனைகளில் நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் உள்ளிட்ட சித்த மருத்துவ பொருட்களை தேவையான அளவு இருப்பில் வைத்திட வேண்டும்.

BCU மருந்துகளை குடியிருப்பு பகுதிகளில் உள்ள தொட்டிகளில் ஊற்றிடவும், கொசு புகை மருந்துகளை அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் தொடாந்து அடித்திட பணியாளர்களுக்கு அறிவுறுத்திட வேண்டும்.
லேப் டெக்னீசியன் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பிடவும், நகர் நல மையங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை இருப்பில் வைத்திட வேண்டுமெனவும், மழைக்காலம் என்பதால் சிறப்பு கவனமுடன் பணியாற்றிட வேண்டுமென மருத்துவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷாமிளா, உதவி நகர் நல அலுவலா் மரு.மாணிக்கவேல், மற்றும் மருத்துவர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்களைத் தேடி மருத்துவ முகாம்களை மாநகரம் முழுவதும் சிறப்பு கவனம் செலுத்தி நடத்திடவும், காய்ச்சல் உள்ளிட்ட நோய்த் தொற்றுகள் ஏற்பட்டால் அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்களை உடனடியாக நடத்திடவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர்,கடந்த மாத காலத்தில் ராஜவீதி, ரத்தினபுரி உப்பிலிபாளையம், ஆர்.கே.பாய், துடியலார் உள்ளிட்ட மகப்பேறு மருத்துவ மையங்களில் 50 மேற்பட்ட மகப்பேறுகள் நடைபெற்று தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்.
இதேபோல், மற்ற மகப்பேறு மருத்துவ மையங்களிலும் சிறப்பான முறையில் மகப்பேறு சிகிச்சைகள் மேற்கொள்ளவும், சித்த மருத்துவமனைகளில் நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் உள்ளிட்ட சித்த மருத்துவ பொருட்களை தேவையான அளவு இருப்பில் வைத்திட வேண்டும்.
BCU மருந்துகளை குடியிருப்பு பகுதிகளில் உள்ள தொட்டிகளில் ஊற்றிடவும், கொசு புகை மருந்துகளை அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் தொடாந்து அடித்திட பணியாளர்களுக்கு அறிவுறுத்திட வேண்டும்.
லேப் டெக்னீசியன் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பிடவும், நகர் நல மையங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை இருப்பில் வைத்திட வேண்டுமெனவும், மழைக்காலம் என்பதால் சிறப்பு கவனமுடன் பணியாற்றிட வேண்டுமென மருத்துவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷாமிளா, உதவி நகர் நல அலுவலா் மரு.மாணிக்கவேல், மற்றும் மருத்துவர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.