கோவையில் பெய்த கனமழையால் சேறும் சகதியுமாக மாறிய சாய்பாபா கோவில் எம்ஜிஆர் மார்க்கெட்..!

கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் அருகேயுள்ள எம்.ஜி.ஆர் காய்கறி மார்க்கெட் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் நிலையில், போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என சாதி, மத, கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் கோரிக்கை.


கோவை: கோவை மாநகர் பகுதியில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாக காந்திபுரம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.



இந்நிலையில் மழையின் காரணமாக மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் எம்ஜிஆர் காய்கறி மார்கெட் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. இதனால் அங்கு வியாபாரம் செய்யும் சுமார் 1000 வியாபாரிகள் வியாபாரம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.



மேலும் பொதுமக்களும் மார்க்கெட்டிற்குள் நடக்க முடியாத நிலை உள்ளதால் வியாபாரத்திற்காக வைக்கப்பட்டுள்ள காய்கறிகள் அனைத்தும் அழுகி வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை சரி செய்ய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாதி, மதம், கட்சி, சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...