கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் அருகேயுள்ள எம்.ஜி.ஆர் காய்கறி மார்க்கெட் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் நிலையில், போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என சாதி, மத, கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் கோரிக்கை.
கோவை: கோவை மாநகர் பகுதியில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாக காந்திபுரம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

இந்நிலையில் மழையின் காரணமாக மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் எம்ஜிஆர் காய்கறி மார்கெட் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. இதனால் அங்கு வியாபாரம் செய்யும் சுமார் 1000 வியாபாரிகள் வியாபாரம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களும் மார்க்கெட்டிற்குள் நடக்க முடியாத நிலை உள்ளதால் வியாபாரத்திற்காக வைக்கப்பட்டுள்ள காய்கறிகள் அனைத்தும் அழுகி வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை சரி செய்ய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாதி, மதம், கட்சி, சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் மழையின் காரணமாக மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் எம்ஜிஆர் காய்கறி மார்கெட் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. இதனால் அங்கு வியாபாரம் செய்யும் சுமார் 1000 வியாபாரிகள் வியாபாரம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்களும் மார்க்கெட்டிற்குள் நடக்க முடியாத நிலை உள்ளதால் வியாபாரத்திற்காக வைக்கப்பட்டுள்ள காய்கறிகள் அனைத்தும் அழுகி வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை சரி செய்ய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாதி, மதம், கட்சி, சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.