கோவை சூலூர் சின்னக்குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு - விளையாடச் சென்ற போது பரிதாபம்

பள்ளி முடிந்த பின்னர் குளத்தில் குளிக்க முற்பட்ட சஸ்வந்த்(8), அகிலன் (10), சஞ்சீவ் (7) என்ற மூன்று சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சூலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள மதியழகன் நகரைச் சேர்ந்தவர்கள் சஸ்வந்த்(8), அகிலன் (10), சஞ்சீவ் (7) இவர்கள் மூவரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.



வழக்கமாக பள்ளி முடிந்து வந்த பின், சூலூர் சின்னக் குளக்கரையில் விளையாடுவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அதேபோல, இன்று மாலை மூவரும் குளக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென குளத்தில் குளிக்க முற்பட்ட போது குளத்தில் தவறி விழுந்த மூவரும் கூச்சலிட்டதாக தெரிகிறது. அப்போது அப்பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சிறுவர்களை பார்த்துள்ளார். உடனடியாக அவர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து விட்டு அந்த இடத்திற்கு சென்று சிறுவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார்.

ஆனால், அந்த ஆட்டோ ஓட்டுநர் செல்வதற்குள் மூன்று சிறுவர்களும் குளத்தில் மூழ்கினர்.



இது குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், மூவரது உடலையும் மீட்டு உடனடியாக சூலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று சிறுவர்களும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் மூவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குளத்தில் விளையாடச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சூலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...