கோவை க.க.சாவடி போக்குவரத்து சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - ரூ.25,680 பறிமுதல்…!

க.க.சாவடி போக்குவரத்து துறை சோதனை சாவடியில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வசூலிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் எஸ்பி திவ்யா தலைமையில், சோதனை மேற்கொள்ளப்பட்டது.


கோவை: இன்று தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கோவை க.க.சாவடி பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து துறை சோதனை சாவடியில் கோவையில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் சோதனை செய்யபட்டு வந்தது.

இங்கு வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வசூலிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் எஸ்பி திவ்யா தலைமையில், ஆய்வாளர்கள் பரிமளா, லதா உள்ளிட்ட போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

மாலை 5 மணிக்கு துவங்கிய இந்த சோதனையானது 7.30 மணி வரை நடைபெற்றது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.25,680 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அலுவலகத்தில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் ஈஸ்வரி மற்றும் உதவியாளர் யுவராஜ் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் சோதனைச் சாவடியில் இருந்த கணக்கில் வராத ரூ.25,680-ஐ பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...