க.க.சாவடி போக்குவரத்து துறை சோதனை சாவடியில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வசூலிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் எஸ்பி திவ்யா தலைமையில், சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவை: இன்று தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கோவை க.க.சாவடி பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து துறை சோதனை சாவடியில் கோவையில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் சோதனை செய்யபட்டு வந்தது.
இங்கு வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வசூலிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் எஸ்பி திவ்யா தலைமையில், ஆய்வாளர்கள் பரிமளா, லதா உள்ளிட்ட போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
மாலை 5 மணிக்கு துவங்கிய இந்த சோதனையானது 7.30 மணி வரை நடைபெற்றது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.25,680 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அலுவலகத்தில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் ஈஸ்வரி மற்றும் உதவியாளர் யுவராஜ் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் சோதனைச் சாவடியில் இருந்த கணக்கில் வராத ரூ.25,680-ஐ பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், கோவை க.க.சாவடி பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து துறை சோதனை சாவடியில் கோவையில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் சோதனை செய்யபட்டு வந்தது.
இங்கு வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வசூலிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் எஸ்பி திவ்யா தலைமையில், ஆய்வாளர்கள் பரிமளா, லதா உள்ளிட்ட போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
மாலை 5 மணிக்கு துவங்கிய இந்த சோதனையானது 7.30 மணி வரை நடைபெற்றது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.25,680 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அலுவலகத்தில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் ஈஸ்வரி மற்றும் உதவியாளர் யுவராஜ் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் சோதனைச் சாவடியில் இருந்த கணக்கில் வராத ரூ.25,680-ஐ பறிமுதல் செய்தனர்.