20 நிமிட மழைக்கே தத்தளிக்கும் கோவை: மாநகராட்சி சுகாதார அலுவலகத்தில் புகுந்த மழை நீர் - பொதுமக்கள் அவதி

கோவை காந்திபுரம், உக்கடம், ரயில் நிலையம் மற்றும் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இன்று பிற்பகல் கனமழை பெய்த நிலையில், மாநகராட்சி பொது சுகாதார அலுவலகத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 26 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.



இந்நிலையில், கோவை காந்திபுரம், உக்கடம், ரயில் நிலையம் மற்றும் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.



வெறும் 20 நிமிடம் பெய்த மழைக்கே, காந்திபுரம், சித்தாபுதூர், வி.கே.கே மேனன் சாலை பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பொது சுகாதார அலுவலகத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.



தண்ணீரை வெளியேற்றாமல் அந்த பகுதிகளில் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



இதனிடையே, மழைக்காலம் தீவிரம் அடைவதற்குள் மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுத்து மழை நீர் வடிகால்களை தூர்வாரி வேண்டும் மற்றும் மோசமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...