கோவை புல்லுக்காடு பகுதியில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரை விற்பனை செய்த நபர் கைது

புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்து வந்த காஜா உசைன் (23) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


கோவை: போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் கோவை மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்து வருகிறது. குறிப்பாக, தனிப்படை அமைத்து ரோந்து சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து வருகின்றனர்.

நேற்று, புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், பெரியகடை வீதி போலீசார், விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சோதனையில், சட்ட விரோதமாக போதை மாத்திரை விற்பனை செய்த காஜா உசைன் (23)

என்ற இளைஞரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் மீது, போதைப்பொருள் ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்து வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

போதைக்காக வலி நிவாரணி உள்ளிட்ட மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பல் மீதும், மாத்திரை சப்ளை செய்வோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...