புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்து வந்த காஜா உசைன் (23) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கோவை: போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் கோவை மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்து வருகிறது. குறிப்பாக, தனிப்படை அமைத்து ரோந்து சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து வருகின்றனர்.
நேற்று, புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், பெரியகடை வீதி போலீசார், விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சோதனையில், சட்ட விரோதமாக போதை மாத்திரை விற்பனை செய்த காஜா உசைன் (23)
என்ற இளைஞரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் மீது, போதைப்பொருள் ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்து வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
போதைக்காக வலி நிவாரணி உள்ளிட்ட மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பல் மீதும், மாத்திரை சப்ளை செய்வோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று, புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், பெரியகடை வீதி போலீசார், விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சோதனையில், சட்ட விரோதமாக போதை மாத்திரை விற்பனை செய்த காஜா உசைன் (23)
என்ற இளைஞரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் மீது, போதைப்பொருள் ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்து வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
போதைக்காக வலி நிவாரணி உள்ளிட்ட மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பல் மீதும், மாத்திரை சப்ளை செய்வோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.