கோவை செல்வபுரம் அருகே 3 கிலோ தங்க நகையை பெற்று மோசடி - நகை கடை உரிமையாளர் கைது

சுக்ரவார்பேட்டை பகுதியில் நகை பட்டறை உரிமையாளரிடம் இருந்து ரூ.1.2 கோடி மதிப்பிலான நகைகளை வாங்கிக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட நகைக்கடை உரிமையாளரை கைது செய்து போலீசார் விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியை சேர்ந்த காஜா ஹுசைன் என்பவர் சுக்ரவார்பேட்டை பகுதியில் தங்க ஆபரணங்கள் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவர் நகை கடைகளுக்கு ஆபரணங்கள் செய்து விநியோகம் செய்யும் தொழில் நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் ஆர்.ஜி. வீதி பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் காஜா ஹுசைனுடன் வரவு செலவு வைத்திருந்துள்ளார். விஜயகுமாருடன் அவரது மனைவி விஜயகுமாரியும் சேர்ந்து நகைக்கடை நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில். கடந்த இரண்டு மாதங்களுக்குமுன் 1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 3 கிலோ 306 கிராம் தங்க நகை ஆபரணத்தை காஜா ஹுசைன் விஜயகுமாரிடம் விநியோகம் செய்திருக்கிறார். ஆனால் நகைக்கான பணத்தை தராமல் விஜயகுமார் தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் தங்க நகைகளையும் திருப்பி தராமல் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இதுதொடர்பாக காஜா ஹுசைன் வெரைட்டி ஹால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தபுகாரின் அடிப்படையில் போலிஸார் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவர் மீதும் 406 மற்றும் 420 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து விசாரணை நடத்தி வந்த போலீசார், விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...