கோவை செல்வபுரம் அருகே 3 கிலோ தங்க நகையை பெற்று மோசடி - நகை கடை உரிமையாளர் கைது

சுக்ரவார்பேட்டை பகுதியில் நகை பட்டறை உரிமையாளரிடம் இருந்து ரூ.1.2 கோடி மதிப்பிலான நகைகளை வாங்கிக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட நகைக்கடை உரிமையாளரை கைது செய்து போலீசார் விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியை சேர்ந்த காஜா ஹுசைன் என்பவர் சுக்ரவார்பேட்டை பகுதியில் தங்க ஆபரணங்கள் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவர் நகை கடைகளுக்கு ஆபரணங்கள் செய்து விநியோகம் செய்யும் தொழில் நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் ஆர்.ஜி. வீதி பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் காஜா ஹுசைனுடன் வரவு செலவு வைத்திருந்துள்ளார். விஜயகுமாருடன் அவரது மனைவி விஜயகுமாரியும் சேர்ந்து நகைக்கடை நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில். கடந்த இரண்டு மாதங்களுக்குமுன் 1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 3 கிலோ 306 கிராம் தங்க நகை ஆபரணத்தை காஜா ஹுசைன் விஜயகுமாரிடம் விநியோகம் செய்திருக்கிறார். ஆனால் நகைக்கான பணத்தை தராமல் விஜயகுமார் தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் தங்க நகைகளையும் திருப்பி தராமல் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இதுதொடர்பாக காஜா ஹுசைன் வெரைட்டி ஹால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தபுகாரின் அடிப்படையில் போலிஸார் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவர் மீதும் 406 மற்றும் 420 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து விசாரணை நடத்தி வந்த போலீசார், விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...