உதகை தொட்டபெட்டா மலைப்பகுதிகளில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அரிய வகையான சிறுகுறிஞ்சி மலர்கள் பூக்கத் துவங்கியுள்ள நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் மலை முழுவதும் நீலநிறப் போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கும்.
நீலகிரி: நீலக்குறிஞ்சி என்று அழைக்கப்படும் குறிஞ்சி செடியானது, இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பரவலாக வளரும் ஒரு செடியாகும். இதில்பூத்துக் குலுங்கும் நீல நிற மலர்களின் காரணமாகவே, தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரிஎன்ற பெயர் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நீலக்குறிஞ்சிமலர்ச்செடிகள் மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே வளர்கின்றன. இந்த செடியின் உயரம் சுமார் 30 சென்டிமீட்டர் முதல் 60 சென்டிமீட்டர் வரையில் இருக்கும். இந்த செடியில் பூக்கும் பிரகாசமான ஊதாபூக்கள், கோயில் மணியின் உருவம் கொண்டவையாக இருக்கும்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் இந்த சிறுகுறிஞ்சி மலர்கள், தொட்டபெட்டா மலைச் சிகர பகுதிகளில் தற்போதுபூக்கத் துவங்கியுள்ளன. இந்த குறிஞ்சி மலர்கள் இன்னும் ஒரு மாத காலத்தில் தொட்டபெட்டா மலைச் சிகரம் சுற்றியுள்ள மலை முழுவதும் பூத்துக் குலுங்கும் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாகதொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் இந்த சிறுகுறிஞ்சி மலர்கள், தற்போது பூக்கத் துவங்கியுள்ளது மலைகிராம மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.