கோவை பீளமேடு அருகே உதவி கேட்பது போல் நடித்து வட மாநில இளைஞரிடம் வழிப்பறி

பீளமேடு அருகே நடந்து சென்றவர்களிடம் உதவி கேட்பது போல் நடித்து வடமாநில இளைஞர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: பீளமேடு பகுதியில் உள்ள ஹோட்டல் அராபியன் நைட்ஸ் என்ற உணவகத்தில்சைனிஸ் மாஸ்டராக அஷிக்குல் அல் இஸ்லாம்என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள சஜாய் பதார் கிராமத்தை சேர்ந்தவர்.

இந்நிலையில் இவர் பீளமேட்டில் உள்ள உணவகத்தில் வேலை முடிந்து, தனது சொந்த ஊரை சேர்ந்த நண்பரை சந்திக்க லன்கா கார்னர் பிரிட்ஜ் வழியாக அவரது நண்பர் அறைக்கு சென்றுள்ளார்.அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் தனது நண்பரிடம் பேச வேண்டும் என்று தெரிவித்து அஷிக்குலிடம் அலைபேசி வாங்கியுள்ளார்.

ஆனால் அலைபேசியைவாங்கியவுடன் அஷிக்குல் அல் இஸ்லாம் மீது அந்த நபர் திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதனையடுத்து அவரிடம் இருந்த ரூ.7,000 பணம் உள்ளிட்டவற்றை பறித்துள்ளார்.

அப்போது அஷிக்குல் அல் இஸ்லாம் கத்தி கூச்சலிட்டதை தொடர்ந்து,வழிப்பறி கொள்ளையன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கூச்சல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் வடகிழக்கு மாநில வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மர்மநபரின் தாக்குதலில் தலையின் இடது பக்கம் மற்றும் மேல் உதட்டில் பலத்த காயம் அடைந்த நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக 392, 397 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த உக்கடம் போலிசார், வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...