கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறை தீர்ப்பு முகாம்

இன்று ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்ப்பு முகாமில், வீட்டுமனை, உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகளை ஆட்சியரிடம் முன் வைத்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு வாரம் திங்களன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த முகாமில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அவரவர் பகுதியில் உள்ள பிரச்சனைகள் அல்லது தனிப்பட்ட பிரச்சினைகள் குறித்து மனுவாக மனுவாக ஆட்சியரிடம் மனுவாக வழங்குவர்.

மக்கள் குறைதீர்ப்பு நாளன்று கூட்டத்தில் நின்று மாற்றுத்திறனாளிகள் அவர்கள் மனு அளிப்பதில் பல்வேறு சிரமங்களை சந்திப்பதால், மாற்றுத்திறனாளிகள் மனுவை பெறுவதற்கு என்றே இன்று சிறப்பு குறை தீர்ப்பு முகாம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற முகாமில், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, மாநகராட்சி மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் என அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



இதில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள், வீட்டு மனை பட்டா, மருத்துவ உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து மனுவாக அவர்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக குறை தீர்ப்பு முகாம் நடத்தியதால், மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி தங்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...