கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறை தீர்ப்பு முகாம்

இன்று ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்ப்பு முகாமில், வீட்டுமனை, உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகளை ஆட்சியரிடம் முன் வைத்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு வாரம் திங்களன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த முகாமில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அவரவர் பகுதியில் உள்ள பிரச்சனைகள் அல்லது தனிப்பட்ட பிரச்சினைகள் குறித்து மனுவாக மனுவாக ஆட்சியரிடம் மனுவாக வழங்குவர்.

மக்கள் குறைதீர்ப்பு நாளன்று கூட்டத்தில் நின்று மாற்றுத்திறனாளிகள் அவர்கள் மனு அளிப்பதில் பல்வேறு சிரமங்களை சந்திப்பதால், மாற்றுத்திறனாளிகள் மனுவை பெறுவதற்கு என்றே இன்று சிறப்பு குறை தீர்ப்பு முகாம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற முகாமில், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, மாநகராட்சி மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் என அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



இதில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள், வீட்டு மனை பட்டா, மருத்துவ உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து மனுவாக அவர்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக குறை தீர்ப்பு முகாம் நடத்தியதால், மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி தங்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...