அவிநாசி சாலை மற்றும் உடுமலை அருகே ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: காளப்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் கராத்தே மணி (வயது 42). இவர் அவிநாசி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஜே.சி.பி. ஒன்று இவரது இருசக்கர வாகன்ம் மீது மோதியதில், படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து நடந்த இடத்துக்கு சென்ற இன்ஸ்பெக்டர் மாதையன் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக, திருப்பூர் பல்லடம் அறிவொளி நகரைச் சேர்ந்த ஜே.சி.பி.டிரைவர் முருகேசன் என்பவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மெட்ராத்தி பகுதியில் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளி, மணி (வயது 33).
இவர் நேற்று பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மழை பெய்ததால், அவரது பைக் சக்கரம் வழுக்கி, கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அவரது மனைவி புஷ்பா கோமங்கலம் போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்துக்கு சென்ற இன்ஸ்பெக்டர் மாதையன் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக, திருப்பூர் பல்லடம் அறிவொளி நகரைச் சேர்ந்த ஜே.சி.பி.டிரைவர் முருகேசன் என்பவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மெட்ராத்தி பகுதியில் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளி, மணி (வயது 33).
இவர் நேற்று பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மழை பெய்ததால், அவரது பைக் சக்கரம் வழுக்கி, கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அவரது மனைவி புஷ்பா கோமங்கலம் போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.