கோவை மற்றும் திருப்பூர் புறநகர் பகுதிகளில் நடந்த விபத்துகளில் இருவர் பலி; மழையால் பைக் டயர் வழுக்கி பலியான துயரம்

அவிநாசி சாலை மற்றும் உடுமலை அருகே ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: காளப்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் கராத்தே மணி (வயது 42). இவர் அவிநாசி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஜே.சி.பி. ஒன்று இவரது இருசக்கர வாகன்ம் மீது மோதியதில், படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து நடந்த இடத்துக்கு சென்ற இன்ஸ்பெக்டர் மாதையன் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக, திருப்பூர் பல்லடம் அறிவொளி நகரைச் சேர்ந்த ஜே.சி.பி.டிரைவர் முருகேசன் என்பவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மெட்ராத்தி பகுதியில் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளி, மணி (வயது 33).

இவர் நேற்று பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மழை பெய்ததால், அவரது பைக் சக்கரம் வழுக்கி, கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அவரது மனைவி புஷ்பா கோமங்கலம் போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...